விஷக்கடி, நாய்க்கடி விஷம் குறைய பாட்டி வைத்தியம்
நாய்க்கடி விஷம் குறைய:
- கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும்
இடித்து கடிவாயில் வைத்து 3 நாட்கள் கட்டினால், நாய்க்கடி விஷம் குறையும்.
- ஊமத்தை இலைகளை எடுத்து, அரைத்து நல்லெண்ணெய் விட்டு
வதக்கி, நாய் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் நாய்க்கடி விஷம் குறையும்.
விஷக்கடி, அரிப்பு, வலி குறைய:
- கம்பளி பூச்சி கடித்த இடத்தில், முருங்கை இலையை
அரைத்து பற்று போட, அரிப்பு குறையும்.
- சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து, தேனீ கொட்டிய
இடத்தில் போட்டால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.
- கரப்பான்பூச்சி கடித்த இடத்தில், வேப்பிலையும்,
மஞ்சளையும் அரைத்துப் பற்றுப் போட்டால் வலி குறையும்.
- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால்,
சிறிய தேள் (வீடுகளில் காணப்படும் தேள்) கடி விஷம் நீங்கும்.
- கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து, மோருடன்
கலந்து சாபிட்டால், எந்த விஷக்கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.
- எலுமிச்சம்பழ விதையுடன், சிறிது உப்பையும் வைத்து
அரைத்து, தண்ணீரில் கலந்து குடிக்க, தேளின் விஷம் குறையும்.
- காதில் பூச்சிகள் நுழைந்து விடும் பொது, இரண்டு
துளி வெங்காயச் சாற்றை விட்டால், பூச்சிகள் வெளியே வந்துவிடும்.
- விஷம் உள்ள வீட்டுப் பூசிகள் கடித்துவிட்டால், ஆடா
தொடையை சுத்தம் செய்து அரைத்து, சிறிதளவு வெந்நீரில் வேகவைத்து கலந்து குடிக்க விஷம்
முறியும்.
- தென்னை மரக்குருத்தோலையை நெருப்பில் விட்டு, தூள்
செய்து, பின்பு தேங்காய் எண்ணெய் குழப்பி, செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வர செருப்பு
கடியினால் ஏற்பட்ட புண் குணமாகும்.
- குப்பைமேனி இலையை மைய அரைத்து, எலி கடித்த கடிவாயில்
பத்து போட, எலிக் கடியின் விஷம் குறையும்.
- பூரான் கடித்த இடத்தில் குப்பைமேனி, உப்பு மற்றும்
மஞ்சள் சேர்த்து அரைத்து பத்து போட விஷக்கடி குணமாகும்.
- அவுரி வேர், அறுகம்புல், மிளகு மூன்றையும் சேர்த்து
அரைத்து, பூரான் கடித்த இடத்தில் போட்டால் வலி குறையும்.
- மாங்காய் பறிக்கும் போது, அதன் காம்பிலிருந்து வழியும்
பாலை தேனீ கொட்டிய இடத்தில் தடவினால், உடனடி நிவாரணமளிக்கும்.