இதயம் பலம் பெற, நெஞ்சு வலி வராமல் தடுக்க பாட்டி வைத்தியம்
இதயம் பலம் பெற:
- செம்பருத்தி பூவை தண்ணீர், தேன் கலந்து தினமும்
காலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.
- செம்பருத்தி பூவை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி,
தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்.
- அத்திப்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்
இதயம் பலப்படும். மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் குறையும்.
நெஞ்சு வலி வராமல் தடுக்க:
- வெங்காயத்தையும், கேரட்டையும் அடிக்கடி உணவுடன்
சேர்த்துக்கொண்டால், நெஞ்சு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- துளசி விதை, பன்னீர், சர்க்கரை மூன்றையும் ஒரு தேக்கரண்டி
வீதம் ஒன்றாக கலக்கி, நாளொன்றிற்கு இரண்டு வேளை சாப்பிட, மார்பு வலி குணமாகும்.
- கிச்மஸ் பழம், கொத்தமல்லியை இரண்டையும் தண்ணீரில்
சுட வைத்து அரைத்து, வடிகட்டி, காலையில் குடித்தால் மார்பு படபடப்பு, வலி குணமாகும்.
- 2 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சளை ஒரு வெற்றிலையில் வைத்து
தினமும் 2 வேளை மென்று சாப்பிட்டு வந்தால், மார்பு வலி குறையும்.
- கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை கஷாயம்
செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
- பேரிச்சம் பழம் நான்கை முதல் நாள் மதியம் தேனில்
ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.