முகப்பரு, கரும்புள்ளிகள் குறைய; சுருக்கங்கள் விலக, முகம் பொலிவு பெற பாட்டி வைத்தியம்
முகப்பரு குறைய:
- வெந்தயக்கீரையை அரைத்து, தினமும் முகத்தில் தடவி
10 நிமிடம் ஊற வைத்து, பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.
- சந்தனத்தை பன்னீருடன் கலந்து தினமும் முகத்தில்
தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.
- சிறிது படிகாரத்தை நீரில் கரைத்து முகம் கழுவி வந்தால்,
முகப்பருவினால் தோன்றிய வடுக்கள் மாறும்.
- வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில்
போட்டு காய்ச்சி, பருக்கள் மீது தடவி வர முகப்பரு நீங்கும்.
- முட்டைகோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக அடிக்கடி
சாப்பிட்டு வந்தால் பருக்கள் மறையும்.
- அருகம்புல் பொடி, குப்பைமேனி பொடி இரண்டையும் கலந்து,
முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.
கரும்புள்ளிகள் குறைய:
- தக்காளிச்சாறுடன் தயிர் கலந்து, தினமும் முகத்தில்
தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.
- பப்பாளிச் சாறுடன், தேன் கலந்து முகத்தில் தடவி
10 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவினால் முகத்தின் கருமை நிறம் குறையும்.
- உருளைக்கிழங்குச் சாறு, தக்காளிச் சாறு, பாப்பாளிச்
சாறு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி, முகம் கழுவினால் கரும்புள்ளிகள் குறையும்.
- வெள்ளரிக்காயை அரைத்து கரும்புள்ளி மீது தடவி, நன்கு
காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகம் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
முகச் சுருக்கங்கள் விலக:
- கசகசாவை அரை கப் எருமை தயிரில் அரைத்து, தினமும்
இரவு படுக்க போகும் முன் முகத்தில் தடவி வந்தால், சுருக்கங்கள் விலகி முகம் பளபளப்புடன்
தோற்றமளிக்கும்.
- பாதாம் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் இரண்டையும்
கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகச்சுருக்கம் மறையும்.
- முட்டையின் வெள்ளைக்கரு, பால், மஞ்சள் கலந்து முகத்தில்
தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில்
வெறும் வயிற்றில் குடிக்க தோல் மிருதுவாக மாறும்.
- கடலை மாவு, வெந்தயம் இவற்றை அடிக்கடி தேய்த்து முகம்
கழுவி வந்தால் பருக்கள் நீங்கும். முகம் சொரசொரப்பு, முகம் எரிச்சல் நீங்கும்.
- கடலை மாவு, எழுமிச்சை சாறு, பால் மூன்றையும் கலந்து
முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால், முகம் மிருதுவாக மாறும்.
- கடுகை ஊறவைத்து அரைத்து, தினமும் கை முட்டியில்
தடவி, 5 நிமிடம் ஊறவைத்து பின் கழுவிவர, கை முட்டியின் கருப்பு குறையும்.
முகம் பொலிவு பெற:
- தினமும் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால்
உடல் பளபளப்பாக மாறுவதோடு, முகமும் பொலிவு பெரும். தோல் சொரசொரப்பு விலகும்.
- கோதுமை கஞ்சி, கீரை, பச்சை காய்கறிகள் இவற்றை தினமும்
சாப்பிட்டு வர, சருமம் நிறம் குறையாமல் இருக்கும்.
- எலுமிச்சை சாறு, தேன், பால் மூன்றையும் கலந்து தினமும்
முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
- பாலில் எலுமிச்சை சாறை கலந்து, தினமும் முகத்தில்
தடவி 10 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
- கஸ்தூரி மஞ்சள், பயத்த மாவு இரண்டையும் தயிருடன்
கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக
மாறும்.
- பாலுடன் ஓட்சை காய்ச்சி, ஆறிய பின் பன்னீருடன் கலந்து
முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
- பாலுடன் சந்தனம் கலந்து, தினமும் முகத்தில் தடவி
10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
- வெள்ளரிச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து
முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
- புதினா சாறு, துளசி சாறு, இரண்டையும் கலந்து, தினமும்
முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
- வெள்ளரியை சாறெடுத்து, பாலாடையுடன் கலந்து தினமும்
முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.