பல்வலி, வாய்ப்புண் குணமாக பாட்டி வைத்தியம்
வாய்ப்புண் குணமாக:
- கசகசாவை தூளாக்கி, பசும் பாலில் கலந்து இரவு வேளையில்,
சாப்பிட்ட பின் குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
- அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து, நீரில் போட்டு
அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட, நாக்கில் உள்ள புண் குணமாகும்.
- நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து, அதனுடன் உப்பு
அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.
பல் வலி குணமாக:
- துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி, அந்த நீரை அடிக்கடி
வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.
- சிறு துண்டு சுக்கை, வாயில் போட்டு மெல்ல பல்வலி
குறையும்.
- கடுக்காய் பொடியை, பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து
வர ஈறுவலி, வீக்கம், இரத்தம் கசிதல் ஆகியவை தீரும்.
- புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, அதனுடன் கடுக்காய்தூள்
சேர்த்து, நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல்வலி தீரும்.
- உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும்
கலந்து தினமும் பல் துலக்கி வர, பல்வலி குறையும்.
- புங்க மர இலையை காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு அடிக்கடி
வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.
- பெருங்காயப் பொடியை வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப்
பல்குழியில் வைத்து கடித்து கொண்டால், சொத்தைப் பல்வலி நொடியில் பறந்துவிடும்.
- பல்வலி ஏற்படும் போது, சிறிது மிளகுத் தூளில் கிராம்பு
எண்ணைய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வர, பல்வலி குறையும்.
- புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி,
உப்பு மூன்றையும் கலந்து பல் துலக்கி வர, பல்வலி குறையும்.
- மாவிலையை பொடி செய்து, பல் துலக்கி வந்தால் பற்கள்
சுத்தமும், உறுதியும் ஆகும்.