- கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் வாட்டர் 3 சொட்டு
இவை மூன்றையும் சேர்த்து அரைத்து, உதட்டில் தடவி வந்தால், உதடு சிவப்பாக மாறும்.
- புதினா, கொத்துமல்லி இலை இரண்டையும் அரைத்து, தினமும்
உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.
- பாலாடை, தேன் இரண்டையும் கலந்து, தினமும் உதட்டில்
தடவி 10 நிமிடம் கழித்து, கழுவினால் உதடு மென்மையாக மாறும்.
- உதட்டில் புண் ஏற்பட்டால், அத்திகாயை அடிக்கடி சாப்பிட்டு
வர உதட்டு புண் குணமாகும்.
நாய்க்கடி விஷம் குறைய:
- கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும்
இடித்து கடிவாயில் வைத்து 3 நாட்கள் கட்டினால், நாய்க்கடி விஷம் குறையும்.
- ஊமத்தை இலைகளை எடுத்து, அரைத்து நல்லெண்ணெய் விட்டு
வதக்கி, நாய் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் நாய்க்கடி விஷம் குறையும்.
விஷக்கடி, அரிப்பு, வலி குறைய:
- கம்பளி பூச்சி கடித்த இடத்தில், முருங்கை இலையை
அரைத்து பற்று போட, அரிப்பு குறையும்.
- சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து, தேனீ கொட்டிய
இடத்தில் போட்டால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.
- கரப்பான்பூச்சி கடித்த இடத்தில், வேப்பிலையும்,
மஞ்சளையும் அரைத்துப் பற்றுப் போட்டால் வலி குறையும்.
- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால்,
சிறிய தேள் (வீடுகளில் காணப்படும் தேள்) கடி விஷம் நீங்கும்.
- கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து, மோருடன்
கலந்து சாபிட்டால், எந்த விஷக்கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.
- எலுமிச்சம்பழ விதையுடன், சிறிது உப்பையும் வைத்து
அரைத்து, தண்ணீரில் கலந்து குடிக்க, தேளின் விஷம் குறையும்.
- காதில் பூச்சிகள் நுழைந்து விடும் பொது, இரண்டு
துளி வெங்காயச் சாற்றை விட்டால், பூச்சிகள் வெளியே வந்துவிடும்.
- விஷம் உள்ள வீட்டுப் பூசிகள் கடித்துவிட்டால், ஆடா
தொடையை சுத்தம் செய்து அரைத்து, சிறிதளவு வெந்நீரில் வேகவைத்து கலந்து குடிக்க விஷம்
முறியும்.
- தென்னை மரக்குருத்தோலையை நெருப்பில் விட்டு, தூள்
செய்து, பின்பு தேங்காய் எண்ணெய் குழப்பி, செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வர செருப்பு
கடியினால் ஏற்பட்ட புண் குணமாகும்.
- குப்பைமேனி இலையை மைய அரைத்து, எலி கடித்த கடிவாயில்
பத்து போட, எலிக் கடியின் விஷம் குறையும்.
- பூரான் கடித்த இடத்தில் குப்பைமேனி, உப்பு மற்றும்
மஞ்சள் சேர்த்து அரைத்து பத்து போட விஷக்கடி குணமாகும்.
- அவுரி வேர், அறுகம்புல், மிளகு மூன்றையும் சேர்த்து
அரைத்து, பூரான் கடித்த இடத்தில் போட்டால் வலி குறையும்.
- மாங்காய் பறிக்கும் போது, அதன் காம்பிலிருந்து வழியும்
பாலை தேனீ கொட்டிய இடத்தில் தடவினால், உடனடி நிவாரணமளிக்கும்.
வாந்தி நிற்க:
- வேப்பம் பூவை வறுத்து, பொடி செய்து வெந்நீருடன்
கலந்து குடித்து வந்தால், வாந்தி குறையும்.
- அத்தி செடியின் பூவை, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி
குடித்து வர, வாந்தி குறையும்.
- கிராம்பை பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட்டு
வந்தால், வாந்தி குறையும்.
- ஏலக்காய் 15, வால் மிளகு 15 மற்றும் மூன்று வெற்றிலை
ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தால் வாந்தி நிற்கும்.
- துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது
கொடுத்தால் உணவு பிடிக்காமை நீங்கி, வாந்தி நிற்கும்.
விக்கல் நிற்க:
- விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி, 2 தேக்கரண்டி தேனுடன்
கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால், விக்கல் நிற்கும்.
- கடுக்காய் தொலை மைய இடித்து தூள் செய்து, விக்கல்
வரும்போது அரை தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட, விக்கல் மறையும்.
- விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து,
1 தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டால், விக்கல் குறையும்.
- சீரகம், திப்பிலி சேர்த்து பொடி செய்து, தேனில்
குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
வயிற்று வலி குணமாக:
- இஞ்சியை பிழிந்து, அதில் கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால்
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.
- கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடித்து, நன்கு
மென்று சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
- முட்டையின் வெள்ளை கருவோடு, தேன் கலந்து தினமும்
குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
- ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து, இடித்து
தூள் செய்து, ஒரு குவளை மோரில் கலந்து சாப்பிட்டு வர, வயிற்று வலி குணமாகும்.
- ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து
சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகும்.
வயிற்றுப்போக்கு & வயிற்றுக் கடுப்பு குணமாக:
- மாதுளம் பழச்சுளைகளை, வேகவைத்து அதனுடன் இரண்டு
தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு குணமாகும்.
- தொட்டாச்சினுங்கி இலையை அரைத்து, ஒரு குவளை தயிருடன்
கலந்து காலை உணவிற்கு முன் பருகினால், வயிற்றுக் கடுப்பு குறையும்.
- இஞ்சியை பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால்,
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.
- ஒரு கையளவு அரசஇலைக் கொழுந்தை, ஒரு குவளை மோருடன்
கலந்து, தினமும் காலை ஒரு முறை அருந்த வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
- கோரைக் கிழங்கை தோல் நீக்கி, வேகவைத்து அந்நீரை
வடித்து குழந்தைக்கு கொடுக்க, நாற்பட்ட வயிற்றுப்போக்கு நிற்கும்.
- வெந்தயத்தை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து காலையில்
குடிக்க வயிற்று உபாதைகள் குறையும்.
- சிறிதளவு அதிவிடயத்துடன், தேன் கலந்து தினமும் சாப்பிட்டு
வந்தால் வயிற்று போக்கு குறையும்.
- ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து
சாப்பிட்டால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு குணமாகும்.
- வெள்ளை வெங்காயத்தை நேய்யில் வதக்கிச் சாப்பிட இரத்தப்
பேதி, சீதப்பேதி, ஆசனக்கடுப்பு மூலரோகம் ஆகியவை தீரும்.
- சர்க்கரை 10 கிராம், தேன் 2 மேசைக் கரண்டி கலந்து
காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சீதபேதி குறையும்.
வயிற்று பொருமல் குறைய:
- ஜவ்வரிசியை சாதம் போல வேக வைத்து, மோரில் கரைத்து
உப்பு போட்டு சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குறையும்.
- ஒரு கையளவு ஓமத்துடன், 3 வெற்றிலை சேர்த்து, நன்றாக
இடித்து பிழிந்து, தேன் சேர்த்து பருக, வயிற்று பொறுமல் குணமாகும்.
- மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப்
பருகினால் வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.
- மஞ்சளை தணலில் சுட்டு, அந்த சாம்பலை தேனில் கலந்து
தினமும் காலையில், ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
- அதிக உடல் வெப்பம் உள்ளவர்கள், தினமும் கமலா ஆரஞ்சு
பழம் சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சி அடையும்.
- மதிய உணவுடன் அடிக்கடி அகத்திக் கீரையை சாப்பிட்டு
வந்தால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.