Pages

Friday 15 July 2016

இருமல் குணமாக பாட்டி வைத்தியம்

  • எலுமிச்சம் பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை எரிச்சல் குணமாகும்.

  • எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் தூங்கும் முன்னும் குடித்தால் இருமல் குறையும்.

  • 1 கப் எலுமிச்சை பழச்சாறு, 3 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க, வரட்டு இருமல் குணமாகும்.

  • தினமும் இருமுறை அதிமதுரத்தின் சிறு துண்டை வாயில் போட்டு ஒதுக்கி கொண்டால் நெஞ்சு கமறல் உடன் நிற்கும்.

  • சிறிது பெருங்கயத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்த தண்ணீரை குடித்து வர இருமல் நிற்கும்.

  • சிறிதளவு துளசி இலையை எடுத்து அதை இடித்து சாறு எடுத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

  • கற்பூரவல்லி இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் இருமல் நீங்கும்.

  • நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதல்கள் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து சாப்பிட இருமல் குறையும்.

  • ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

  • உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

  • உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

  • திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.

  • சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதனுடன் பணங்கற்க்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

Saturday 20 February 2016

உதடு சிவப்பாக மாற பாட்டி வைத்தியம்

  • கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் வாட்டர் 3 சொட்டு இவை மூன்றையும் சேர்த்து அரைத்து, உதட்டில் தடவி வந்தால், உதடு சிவப்பாக மாறும்.

  • புதினா, கொத்துமல்லி இலை இரண்டையும் அரைத்து, தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

  • பாலாடை, தேன் இரண்டையும் கலந்து, தினமும் உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து, கழுவினால் உதடு மென்மையாக மாறும்.

  • உதட்டில் புண் ஏற்பட்டால், அத்திகாயை அடிக்கடி சாப்பிட்டு வர உதட்டு புண் குணமாகும்.

விஷக்கடி, நாய்க்கடி விஷம் குறைய பாட்டி வைத்தியம்

நாய்க்கடி விஷம் குறைய:


  • கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும் இடித்து கடிவாயில் வைத்து 3 நாட்கள் கட்டினால், நாய்க்கடி விஷம் குறையும்.

  • ஊமத்தை இலைகளை எடுத்து, அரைத்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி, நாய் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் நாய்க்கடி விஷம் குறையும்.

விஷக்கடி, அரிப்பு, வலி குறைய:


  • கம்பளி பூச்சி கடித்த இடத்தில், முருங்கை இலையை அரைத்து பற்று போட, அரிப்பு குறையும்.

  • சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து, தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.

  • கரப்பான்பூச்சி கடித்த இடத்தில், வேப்பிலையும், மஞ்சளையும் அரைத்துப் பற்றுப் போட்டால் வலி குறையும்.

  • நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால், சிறிய தேள் (வீடுகளில் காணப்படும் தேள்) கடி விஷம் நீங்கும்.

  • கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து, மோருடன் கலந்து சாபிட்டால், எந்த விஷக்கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.

  • எலுமிச்சம்பழ விதையுடன், சிறிது உப்பையும் வைத்து அரைத்து, தண்ணீரில் கலந்து குடிக்க, தேளின் விஷம் குறையும்.

  • காதில் பூச்சிகள் நுழைந்து விடும் பொது, இரண்டு துளி வெங்காயச் சாற்றை விட்டால், பூச்சிகள் வெளியே வந்துவிடும்.

  • விஷம் உள்ள வீட்டுப் பூசிகள் கடித்துவிட்டால், ஆடா தொடையை சுத்தம் செய்து அரைத்து, சிறிதளவு வெந்நீரில் வேகவைத்து கலந்து குடிக்க விஷம் முறியும்.

  • தென்னை மரக்குருத்தோலையை நெருப்பில் விட்டு, தூள் செய்து, பின்பு தேங்காய் எண்ணெய் குழப்பி, செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வர செருப்பு கடியினால் ஏற்பட்ட புண் குணமாகும்.

  • குப்பைமேனி இலையை மைய அரைத்து, எலி கடித்த கடிவாயில் பத்து போட, எலிக் கடியின் விஷம் குறையும்.

  • பூரான் கடித்த இடத்தில் குப்பைமேனி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பத்து போட விஷக்கடி குணமாகும்.

  • அவுரி வேர், அறுகம்புல், மிளகு மூன்றையும் சேர்த்து அரைத்து, பூரான் கடித்த இடத்தில் போட்டால் வலி குறையும்.

  • மாங்காய் பறிக்கும் போது, அதன் காம்பிலிருந்து வழியும் பாலை தேனீ கொட்டிய இடத்தில் தடவினால், உடனடி நிவாரணமளிக்கும்.

விக்கல், வாந்தி நிற்க பாட்டி வைத்தியம்

வாந்தி நிற்க:


  • வேப்பம் பூவை வறுத்து, பொடி செய்து வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால், வாந்தி குறையும்.

  • அத்தி செடியின் பூவை, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வர, வாந்தி குறையும்.

  • கிராம்பை பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், வாந்தி குறையும்.

  • ஏலக்காய் 15, வால் மிளகு 15 மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தால் வாந்தி நிற்கும்.

  • துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுத்தால் உணவு பிடிக்காமை நீங்கி, வாந்தி நிற்கும்.

விக்கல் நிற்க:


  • விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி, 2 தேக்கரண்டி தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால், விக்கல் நிற்கும்.

  • கடுக்காய் தொலை மைய இடித்து தூள் செய்து, விக்கல் வரும்போது அரை தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட, விக்கல் மறையும்.

  • விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து, 1 தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டால், விக்கல் குறையும்.

  • சீரகம், திப்பிலி சேர்த்து பொடி செய்து, தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு, வயிற்று பொருமல் குணமாக பாட்டி வைத்தியம்

வயிற்று வலி குணமாக:


  • இஞ்சியை பிழிந்து, அதில் கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.

  • கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடித்து, நன்கு மென்று சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

  • முட்டையின் வெள்ளை கருவோடு, தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.

  • ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து, இடித்து தூள் செய்து, ஒரு குவளை மோரில் கலந்து சாப்பிட்டு வர, வயிற்று வலி குணமாகும்.

  • ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகும்.

வயிற்றுப்போக்கு & வயிற்றுக் கடுப்பு குணமாக:


  • மாதுளம் பழச்சுளைகளை, வேகவைத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு குணமாகும்.

  • தொட்டாச்சினுங்கி இலையை அரைத்து, ஒரு குவளை தயிருடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகினால், வயிற்றுக் கடுப்பு குறையும்.

  • இஞ்சியை பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.

  • ஒரு கையளவு அரசஇலைக் கொழுந்தை, ஒரு குவளை மோருடன் கலந்து, தினமும் காலை ஒரு முறை அருந்த வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

  • கோரைக் கிழங்கை தோல் நீக்கி, வேகவைத்து அந்நீரை வடித்து குழந்தைக்கு கொடுக்க, நாற்பட்ட வயிற்றுப்போக்கு நிற்கும்.

  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து காலையில் குடிக்க வயிற்று உபாதைகள் குறையும்.

  • சிறிதளவு அதிவிடயத்துடன், தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குறையும்.

  • ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு குணமாகும்.

  • வெள்ளை வெங்காயத்தை நேய்யில் வதக்கிச் சாப்பிட இரத்தப் பேதி, சீதப்பேதி, ஆசனக்கடுப்பு மூலரோகம் ஆகியவை தீரும்.

  • சர்க்கரை 10 கிராம், தேன் 2 மேசைக் கரண்டி கலந்து காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சீதபேதி குறையும்.

வயிற்று பொருமல் குறைய:


  • ஜவ்வரிசியை சாதம் போல வேக வைத்து, மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குறையும்.

  • ஒரு கையளவு ஓமத்துடன், 3 வெற்றிலை சேர்த்து, நன்றாக இடித்து பிழிந்து, தேன் சேர்த்து பருக, வயிற்று பொறுமல் குணமாகும்.

  • மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.

  • மஞ்சளை தணலில் சுட்டு, அந்த சாம்பலை தேனில் கலந்து தினமும் காலையில், ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.