தேமல், சொறி சிரங்கு, படை குணமாக பாட்டி வைத்தியம்
தேமல் குணமாக:
- துளசி இலை, வெற்றிலை இரண்டையும் அரைத்து, தேமல்
உள்ள இடத்தில் பூசினால், தேமலின் எரிச்சல் குணமாகும்.
- மஞ்சளை இடித்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தேமலின்
மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
சொறி சிரங்கு குறைய:
- எட்டிமரம் பட்டையை நெய்யில் வறுத்து, அந்த நெய்யை
சொறி சிரங்கு உள்ள இடத்தில் தினமும் தடவி வர சொறி சிரங்கு குறையும்.
- கானா வாழை இலையை அரைத்து, உடலில் அரிப்பு உள்ள இடத்தில்
தினமும் தடவி வர உடல் அரிப்பு குறையும்.
- வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து,
தினசரி 1 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
- சிறிதளவு வேப்பமர பட்டையை எடுத்து, அதை நீரில் போட்டு
கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு குளித்து வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
படை நீங்க:
- முருங்கை இலை சாறுடன், சிறிதளவு உப்பு சேர்த்து
தினமும் 2 வேளை கருப்பு நிறப் படையின் மீது தடவினால், படை நீங்கும்.
- எலுமிச்சம் பழத்தை உடல் முழுவதும் தேய்த்து, கொஞ்ச
நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- முருங்கைக் கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு
வந்தால், தோல் சம்பந்தப்பட்ட தோந்தரவுகளை தவிர்க்கலாம்.