சர்க்கரை நோய் குறைய பாட்டி வைத்தியம்
- வில்வ இலையை பொடி செய்து, காலையில் வெறும் வயிற்றில்
வாயில் போட்டு தண்ணீர் குடிக்க, சர்க்கரை நோய் குறையும்.
- ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து
அரைத்து, தினமும் சிறிதளவு சாப்பிட்டு, தண்ணீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
- தினமும் ஒரு கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல்
மெலிதல், நீரிழிவு நோய், போன்ற சர்க்கரை நோய் சம்மந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும்.
- தொட்டாற் சுருங்கியின் இலை, வேர் இரண்டையும் காய
வைத்து, பொடி செய்து, பாலில் கலந்து காலை நேரத்தில் குடிக்க, சர்க்கரை நோய் குறையும்.
- சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து, தினமும் சாப்பிட்டு
வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
- வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி,
நாவல் கொட்டை பொடி நான்கையும் சேர்த்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய் குறையும்.
- ஆவாரம் பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் இவை மூன்றையும்
சேர்த்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
- தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு, சிறியா
நங்கையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் அலர்ஜி சம்மந்தமான வியாதிகள் குணமாகும்.