கண் பிரச்சனைகள் குணமாக பாட்டி வைத்தியம்
- கண்களில் எந்தவித நோய் தென்பட்டாலும், அன்னாசிபழத்தை
அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண் பிரச்சனைகள் குணமாகும்.
- அகத்திக்கீரையை சூப் செய்து, அடிக்கடி சாப்பிட்டு
வந்தால் கண்ணில் நீர் வடிதல், கண் நோய் குணமாகும்.
- ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு
படுத்தால் கண் நோய் குணமாகும்.
- செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ இவற்றை
அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு, சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ,
கண் சிவப்பு குறையும்.
- முருங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ண கண் எரிச்சல்,
வாய் நீர் ஊறல், வாய்க் கசப்பு குணமாகும்.
- காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர கண் எரிச்சல் குணமாகும்.
- உணவுடன் முள்ளங்கிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு
வந்தால் கண்வலி, கண் எரிச்சல் குறையும்.
- பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து, வெண்ணைய் சேர்த்து
கடைந்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
- அண்ணாசிப் பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம்
செய்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.