வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு, வயிற்று பொருமல் குணமாக பாட்டி வைத்தியம்
வயிற்று வலி குணமாக:
- இஞ்சியை பிழிந்து, அதில் கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால்
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.
- கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடித்து, நன்கு
மென்று சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
- முட்டையின் வெள்ளை கருவோடு, தேன் கலந்து தினமும்
குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
- ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து, இடித்து
தூள் செய்து, ஒரு குவளை மோரில் கலந்து சாப்பிட்டு வர, வயிற்று வலி குணமாகும்.
- ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து
சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகும்.
வயிற்றுப்போக்கு & வயிற்றுக் கடுப்பு குணமாக:
- மாதுளம் பழச்சுளைகளை, வேகவைத்து அதனுடன் இரண்டு
தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு குணமாகும்.
- தொட்டாச்சினுங்கி இலையை அரைத்து, ஒரு குவளை தயிருடன்
கலந்து காலை உணவிற்கு முன் பருகினால், வயிற்றுக் கடுப்பு குறையும்.
- இஞ்சியை பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால்,
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு நிற்கும்.
- ஒரு கையளவு அரசஇலைக் கொழுந்தை, ஒரு குவளை மோருடன்
கலந்து, தினமும் காலை ஒரு முறை அருந்த வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
- கோரைக் கிழங்கை தோல் நீக்கி, வேகவைத்து அந்நீரை
வடித்து குழந்தைக்கு கொடுக்க, நாற்பட்ட வயிற்றுப்போக்கு நிற்கும்.
- வெந்தயத்தை நெய்யில் வறுத்து, மோரில் கலந்து காலையில்
குடிக்க வயிற்று உபாதைகள் குறையும்.
- சிறிதளவு அதிவிடயத்துடன், தேன் கலந்து தினமும் சாப்பிட்டு
வந்தால் வயிற்று போக்கு குறையும்.
- ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து
சாப்பிட்டால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு குணமாகும்.
- வெள்ளை வெங்காயத்தை நேய்யில் வதக்கிச் சாப்பிட இரத்தப்
பேதி, சீதப்பேதி, ஆசனக்கடுப்பு மூலரோகம் ஆகியவை தீரும்.
- சர்க்கரை 10 கிராம், தேன் 2 மேசைக் கரண்டி கலந்து
காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சீதபேதி குறையும்.
வயிற்று பொருமல் குறைய:
- ஜவ்வரிசியை சாதம் போல வேக வைத்து, மோரில் கரைத்து
உப்பு போட்டு சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குறையும்.
- ஒரு கையளவு ஓமத்துடன், 3 வெற்றிலை சேர்த்து, நன்றாக
இடித்து பிழிந்து, தேன் சேர்த்து பருக, வயிற்று பொறுமல் குணமாகும்.
- மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப்
பருகினால் வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.
- மஞ்சளை தணலில் சுட்டு, அந்த சாம்பலை தேனில் கலந்து
தினமும் காலையில், ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.