தொண்டை பிரச்சனைகள் குணமாக பாட்டி வைத்தியம்
- பசும்பாலில் சிறிதளவு ஓமம் போட்டு காய்ச்சி, அடிக்கடி
காலை வேளையில் குடித்து வர தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.
- தும்பை பூவை தினமும் வாயில் போட்டு, மென்று தின்று
வந்தால் தொண்டைப்புண், தொண்டை வலி குணமாகும்.
- எலுமிச்சம் பழச்சாறுடன், தேன் சேர்த்து வெந்நீரில்
கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை எரிச்சல் குணமாகும்.
- அக்கரகாரம் வேரை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி,
காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை பொடி செய்து, பாலில்
கலந்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வர தொண்டை வலி குறையும்.
- பாலுடன் மஞ்சள் போட்டு காய்ச்சி காலை, மாலை தினமும்
குடிக்க தொண்டை வலி குறையும்.
- சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்து, இந்த
பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப்புண் ஆறும்.
- பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை சேர்த்து கஷாயம்
செய்து வாய் கொப்பளித்து வர, தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றை பொடி
செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.
- அண்ணாச்சி பூவின் பொடியை பாலில் போட்டு காய்ச்சி
காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
- தூதுவளை கீரையை அடிக்கடி சாப்பிட்டால் சளி, தொண்டை
வலி, தொண்டை எரிச்சல் சம்பந்தப்பட்ட நோய் குணமாகும்.