சளி விரைவில் குணமாக பாட்டி வைத்தியம்
- ஏலக்காயை போடி செய்து தினமும் காலை, மாலை வெறும்
வயிற்றில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி விரைவில் நீங்கும்.
- முருங்கைக்காய் நசுக்கி சாரெடுத்து அதில் சம அளவு
தேன் கலந்து தினமும் காலையில் சாபிட்டால், சளி நீங்கும்.
- தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி
மிதமான சூட்டில் நெஞ்சில் தினமும் தடவி வர நெஞ்சு சளி குறையும்.
- சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் சிறு துண்டு
கற்பூரம் சேர்த்து சுடவைத்து குழந்தையின் நெஞ்சில் தடவ மார்பு சளி குணமாகும்.
- திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு, மிளகு, வீப்பங்கொழுந்து
சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து மாத்திரையாக்கி சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
- ஆடாதொடா இலை, துளசி, வெற்றிலை, தூதுவளை அரைத்து
பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.
- வெள்ளை பூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலியை
வெந்நீரில் அரைத்து குடித்தால் சளி குறையும்.
- புதினா இலைச்சாறுடன் எழுமிச்சை பழச்சாறு மற்றும்
ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
- மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து
காலை, மாலை சாப்பிட்டால் சளி குறையும்.
- தும்பை இலை, வெங்காயம் இவற்றை தண்ணீர் விட்டு சுண்ட
காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க சளி குறையும்.
- ஆப்பிள், இஞ்சி, எலுமிச்சைசாறு, வெள்ளைப்பூண்டு
இவற்றை அரைத்து கொதிக்க வைத்து தேனுடன் சாப்பிட்டால் சளி, ஜீரணம், கொழுப்பை கட்டுப்படுத்தும்.
- தூதுவளை கீரையை அடிக்கடி சாப்பிட்டால் சளி, தொண்டை
வலி, தொண்டை எரிச்சல் சம்பந்தப்பட்ட நோய் குணமாகும்.
- ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து தினமும் காலை,
மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச் சளி குணமாகும்.
- தூதுவளை இலையை வெண்ணெய் விட்டு வதக்கி காலை நேரத்தில்
சாப்பிட்டு வந்தால் சளி நீங்கி விடும்.